fbpx

Arya paryeshana sutta

2021-10-14T16:05:51+05:30

அரியபரியேசன சூத்திரம் மேன்மையான நிலையை அடைவதற்காக செய்த பரிசோதனை தொடர்பான போதனை என்னால் இவ்வாறு கேட்கப்பட்டது. அந்நாட்களில் பாக்கியமுள்ள புத்த பகவான் சாவத்திய நகரின் அநாதபிண்டிக சீமானால் கட்டுவிக்கப்பட்ட ஜேதவனராமம் எனப்படும் ஆராமத்தில் வசித்திருந்தார். அன்று காலைப் பொழுதில் பகவான், சீவரத்தை போர்த்திக் கொண்டு ஐயக் கொள்கலனையும் இரு மடிப்புடைய சீவரத்தையும் எடுத்துக் கொண்டு சாவத்தி நகரில் ஐயமேற்க சென்றார். [...]

மூல பரியாய சூத்திரம்

2021-08-12T16:23:14+05:30

மூலபரியாய சூத்திரம் அனைத்து விடயத்திற்கும் அடிப்படையானதை பற்றி மொழிந்த போதனை என்னால் இவ்வாறு கேட்கப்பட்டது. அந்நாட்களில் புத்த பகவான் உக்கட்டா நகரின் அருகாமையில் இருந்த சுபக எனும் வனத்தின் பெரியதொரு சாலமர நிழலில் வசித்திருந்தார். அன்று பாக்கியமுள்ள புத்த பகவான் புண்ணியமிகு பிக்குகளே, என பிக்குமார்களை விழித்தார். அதற்கு பிக்குமார்கள் “ஆம் பகவானே” என மறுமொழி அளித்தனர். அந்நேரத்தில்தான் பாக்கியமுள்ள புத்த [...]

மகா சச்சக சூத்திரம்

2021-08-04T11:42:54+05:30

மகா சச்சக சூத்திரம் சச்சகனை முன்னிட்டு விபரமாக மொழிந்த போதனை என்னால் இவ்வாறு கேட்கப்பட்டது. அந்நாட்களில் பாக்கியமுள்ள புத்த பகவான் வை~hலி நகரின் மகா வனத்தில் அமைந்துள்ள குவிமாட மண்டபத்தில் வசித்திருந்தார். அன்று காலைவேளை பாக்கியமுள்ள புத்த பகவான் சீவரத்தை நன்கு போரத்திக் கொண்டு ஐயக்கொள்கலனையும் மற்ற சீவரத்தையும் எடுத்துக் கொண்டு வை~hலி நகரில் ஐயமேற்பதற்காக செல்வதற்கு தயாராகினார். அந்த சமயத்தில் [...]

தேரி காதை

2021-08-04T10:14:13+05:30

அரஹத் பிக்குணீமார்களால் போதிக்கப்பட்ட செய்யுள்கள். (தேரி காதை) அந்த பாக்கியமுள்ள அரஹத் சம்மா சம்புத்த பகவானுக்கு எனது நமஸ்காரங்கள். ஒரு செய்யுள் என்ற வீதத்தில் மொழிந்த பகுதி. 1.1 ஒரு அரஹத் தேரியின் செய்யுள் 1. புண்ணியமிகு பிக்குணீ, பான்சகூல வஸ்திரத்தினால் தைத்துக் கொண்ட சீவரத்தை போர்த்திய பிறகு சுகமாக வசிக்க முடியும். அடுப்பில் வைக்கப்பட்ட பாத்திரத்திலிருந்த கீரை தீய்ந்து போனதைப் [...]

சல்ல சூத்திரம் வேல் தொடர்பாக மொழிந்த பகுதி

2019-09-19T03:49:59+05:30

புண்ணியமிகு பிக்குகளே, தர்மத்தினை அறியாத புதுஜ்ஜனன் சுகம் அனுபவிப்பான். துக்கம் அனுபவிப்பான். சுக துக்கங்களற்ற உபேக்கா எனப்படும் நடுநிலையான நுகர்ச்சியையும் அனுபவிப்பான். அதேபோன்று தர்மத்தினை அறிந்த ஆரிய சீடனும் சுகம் அனுபவிப்பார். துக்கம் அனுபவிப்பார். சுக துக்கங்களற்ற உபேக்கா எனப்படும் நடுநிலையான நுகர்ச்சியையும் அனுபவிப்பார். புண்ணியமிகு பிக்குகளே, இந்த விடயத்தில் புத்த சீடனுக்கும் தர்மத்தினை அறியாத புதுஜ்ஜனனுக்கும் உள்ள வேறுபாடு [...]

Damma padha stories

2019-09-04T10:34:26+05:30

ஒரு விவசாயின் கதை வருந்த நேரிடும் செயல்களை செய்ய வேண்டாம்.   புண்ணியமிக்கவர்களே, கனவிலும் நினைக்காத மாதிரி எமது வாழ்க்கைக்கு பிரச்சினைகள் வரும். பிரச்சனைகள் சொல்லிக்கொண்டு வருவதில்லை. பலர் அம்மாதிரியான பிரச்சினைகளின்போது துவண்டு விழுகின்றனர். அந்த பிரச்சினைகளின் காரணமாக பெரும் அவஸ்தைகளுக்கு ஆளாகின்றனர்.​நிரபராதிகளாக இருந்தாலும் தாம் செய்யாத தவறுக்காக நிந்தனைகளும் தண்டனைகளும் அனுபவிப்பவர்கள் இல்லையா? இந்த கதையும் அப்படித்தான். தான் செய்யாத [...]

Damma padha stories

2019-08-28T11:06:44+05:30

கரண்டி கறியின் சுவை அறியாததைப் போல் அறிவற்றவன் தர்மத்தை அறியான். புண்ணியமிக்கவர்களே, சிலர் தன்னை பெரியவர் என காட்டிக் கொள்வதில் சந்தோஷப்படுகிறார்கள். பதவிகள், மரியாதைகள், கௌரவிப்புகள் கிடைப்பதை மிகவும் விரும்புவார்கள். ஆனால் அவை எதனையும் பெறுவதற்கான தகுதி அவர்களிடமில்லை. புத்த பகவான் வாழ்ந்திருந்த காலத்திலும் அத்தகையவர்கள் இருந்தார்கள். இந்த கதையில் அத்தகையதொரு சம்பவமே குறிப்பிடப்படுகிறது. சாவத்திய நகரின் ஜேதவனராமத்தில் ஒரு பிக்கு [...]

Damma padha stories

2019-08-22T09:08:34+05:30

தன்னுடைய குறைகளை அறிந்துகொண்டவரே அவற்றை நிவர்த்தி செய்துகொள்வார். புண்ணியமிக்கவர்களே, பெரிதாக காசு பணம் இல்லாதவர்கள் சோம்பேறித்தனத்தின் காரணமாக இலகுவாக பணம் தேடுவது எப்படி என யோசித்து, அது பாவமோ புண்ணியமோ என்ற விஷயங்கலெல்லாம் ஒதுக்கி எதை வேண்டுமானாலும் செய்வார்கள். ஒருசிலர் காசுக்காக உயிர்களை கொல்வார்கள். சிலர் திருடுவார்கள். சிலர் தகாத காமத்தில் ஈடுபட்டு அதன் மூலம் பணம் சம்பாதிப்பார்கள். இன்னும் சிலர் [...]

Damma padha stories

2019-08-15T07:06:47+05:30

மகா காசியப்ப தேரரின் சீடனின் கதை அறிவுரை செய்தாலும் அசத்புருஷன் பகைமை கொள்வான். புண்ணியமிக்கவர்களே, இந்த வானம், காற்று, ஆறுகள், சமுத்திரம், மலைமேடுகளை பார்த்து நாம் இந்த உலகம் அதிசயமானது என நினைக்கிறோம். ஆனால் இவ் அனைத்திலும் பார்க்க மனிதனே அதிசயமானவன். புதுமையானவன். சிலர் புண்ணியங்கள் செய்துகொள்ள வேண்டும், சீலங்களை அனுசரிக்க வேண்டும் என நினைத்து அத்கைய இடங்களுக்கு செல்வார்கள். ஆனால் [...]

Damma padha stories

2019-08-09T08:49:27+05:30

ஆனந்த சீமானின் கதை கஞ்சத்தனம் உலோபியை என்ன பாடுபடுத்துகிறது? புண்ணியமிக்கவர்களே, புத்த பகவான் இல்லற வாழ்வை வாழ்கின்றவர்கள் அதாவது சாதாரணமாக வீடுகளில் வாழ்பவர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என அழகாக இப்படிச் சொல்லிக்கொடுத்திருக்கிறார். ஒருவர் இருக்கிறார் அவருக்கு நிறைய பணம் இருக்கிறது. ஆனால் அவர் அந்த பணத்தை தவறான வழிகளில் தான் சம்பாதித்திருக்கிறார். அவரிடம் பணம் இருப்பது நல்ல விஷயமாக இருந்தாலும் [...]

Go to Top