ஷ்ரத்தா கல்வி புலமைப்பரிசில் செயற்றிட்டம்

வாழ்வினை கட்டியெழுப்பல், தமது கடமைகளை நிறைவேற்றுதல், தான் வாழும் சமூகத்திற்கு சுமையாக வாழாதிருத்தல் எனும் அனைத்து முக்கிய காரணிகளுக்கும் அடிப்படையாக அமைவது கல்வியே ஆகும். பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு முறையான கல்வியை அளித்து அவர்களை ஒரு உன்னத நிலைக்கு கொணர்வித்தல் எனும் விடயத்தினை செய்வதற்கு செய்யும் சேவை அளப்பரியதாகும்.
ஆனால் பல்வேறு பொருளாதார இன்னல்களின் மத்தியில் வாழும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு முறையான கல்வியை வழங்குவது கடினமான முயற்சியாகவே இருக்கிறது. அதனாலேயே இவ்வாறான பொருளாதார இன்னல்களை எதிர்நோக்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு அவர்களின் கல்விக்கு உதவிக்கரமாக அமையும் பொருட்டு துவங்கப்பட்டதே இந்த புலமைப்பரிசில் செயற்றிட்டமாகும். அவர்களுக்கு நீங்களும் வளர்ப்பு தந்தையாகலாம்… வளர்ப்பு தாயாகலாம்… தமது எதிர்காலத்தினை வெற்றி கொள்ள எத்தணிக்கும் அந்த பிள்ளைகளுக்கு உங்களது உதவிக்கரத்தினை அளிக்க நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்… 

தொடர்பு கொள்ளுங்கள் 071 232 88 46 மின்னஞ்சல் முகவரி: charity@shraddha.lk