கோபம் என்பது வீரமல்ல. அது மனதை பலவீனப்படுத்தும் ஒரு கிலேசமாகும். கோபத்தினால் துக்கமும், பயமும், பின்வருந்துதலுமே எஞ்சுகின்றது. நண்பர்களை பகையாளிகளாக்கும், ஏனையோரின் வெறுப்பிற்கு பாத்திரமாகும் கோபத்தினை எவ்வாறு அழிப்பது? முழுமையாக கோபத்தினை மனதில் இருந்து அகற்ற முடியுமா?