நான் சிறிய வயதில் இருக்கும் போது நாம் அனைவரும் ஒன்றாகவே இருந்தோம். எனது அம்மாவூம் மாமாமார்கள் இருவரும் நானும் பற்றை முற்புதர்கள் நிறைந்த வறண்ட வலய கானகம் ஒன்றிலேயே இருந்தோம். “மகனே.. நீ என்னருகிலேயே இரு… எங்கும் தனியாக செல்லக்கூடாது” என்று அம்மா அடிக்கடி அறிவூறுத்துவாள். நானும் அம்மாவின் கால்களுக்கிடையிலும் தும்பிக்கையூம் சுற்றி சுற்றியே இருந்தேன்…