மகா சங்கையருக்கு அன்னதானம்

நமோ புத்தாய! அபித்தரேத கல்யானே – பாபா சித்தங் நிவாரயே தன்தங் ஹி கரோதோ புஞ்ஞங் – பாபஸ்மிங் ரமதீ மனோ தானம், சீலம், சமாதி ஆகிய நன்மை பொருந்திய விடயங்களைச் சீக்கிரமாகவே செய்துகொள்ள வேண்டும். அதேபோன்று மனதைப் பாவங்களிலிருந்து தவிர்த்துக்கொள்ளல் வேண்டும். உண்மையான தேவையின்றி தாமதமாகிய வண்ணம் புண்ணியங்களைச் செய்வதாயின் தன்னையுமறியாமலேயே மனம் பாவங்களை விரும்பும். (தம்ம பதம்) தமிழ் பௌத்தன் அமைப்பினால் 2018.12.04 ம் திகதி மாத்தரை பிரதேசத்தில் அமைந்திருக்கும் மஹமெவ்னா தியான ஆச்சிரமத்தில் வசிக்கும் மகா சங்கையருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மனதிலுள்ள ஆசை, கோபம், அறியாமை எனும் மும்மலங்களை போக்குவதற்காக புத்த பகவானைச் சரணடைந்து உன்னத துறவறத்தை மேற்கொள்ளும் மகா சங்கையருக்கு தானம் அளித்ததால் ஈட்டிய அனைத்து புண்ணியங்களையும் புண்ணியங்களை விரும்புவோர்கள் ஏற்றுக் கொள்வதாக! மும்மணிகளின் சரணம்!